மணிலா: பிலிப்பீன்சின் மிண் டானோ தீவில் ராணுவச் சட்டத்தை நீட்டிப்பதற்கு ஆதர வாக பிலிப்பீன்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வாக்கு அளித்துள்ளனர். ஐஎஸ் தொடர்புடைய போராளிகள் கடந்த மே மாதம் முதல் தென்பகுதி மராவி நகரின் சில பகுதிகளை ஆக்கிரமித் துள்ளனர். அந்நகரில் தீவிர வாதத்தை துடைத்தொழிக்க அங்கு ராணுவச் சட்டத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே கூறினார். அதிபர் டுட்டர்டே அவரது அதிகாரப் பிடியை வலுப் படுத்திக் கொள்வதற்கான ஒரு பகுதியே இது என்று அவரது எதிர்ப் பாளர்கள் கூறுகின்றனர். தன்னாட்சியை ஏற்படுத்த விரும்பும் முஸ்லிம் போராளிகள் குழுக்கள் மிண்டானோவில் செயல்பட்டு வருகின்றன. சட்டத்தை அமல்படுத்த ராணு வத்தை பயன்படுத்தவும் குற்றம் எதுவும் சாட்டப்படாமல் ஒருவரை நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைக்கவும் ராணுவச் சட்டம் வகை செய்கிறது. முன்னதாக அங்கு 60 நாட்கள் வரை விதிக்கப்பட்டிருந்த ராணுவச் சட்டம் நேற்றுடன் முடிவுற்ற நிலையில் இந்தச் சட்டம் இன்று முதல் நீட்டிக்கப்படுகிறது.
மிண்டானோவில் ராணுவச் சட்டம் நீட்டிப்பு
23 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jul 2017 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!