புதிய பாணியில் யானைத் தந்தங்கள் கடத்தல்

கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 159 கிலோ எடையுள்ள யானைத் தந்தங்களை மலேசிய சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் காட்டினர். இவற்றின் மதிப்பு சுமார் US$382,000 என மதிப்பிடப்படுகிறது. கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மூன்று வியட்னாமியரிடமிருந்து யானைத் தந்தங்கள் பிடிபட்டன. இரு வியட்னாமியர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில், மூன்றாமவர் தேடப்பட்டு வருகிறார்.

அவர் விட்டுச் சென்ற பையில் 58 கிலோ யானைத் தந்தங்கள் இருந்தன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 101 கிலோ தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கமாக கடல் வழியாக யானைத் தந்தங்களைக் கடத்தி வந்தவர்கள் விமானம் மூலம் கடத்தும் புதிய உத்தியில் ஈடுபட்டுள்ளதாக 'டிராஃபிக்' எனப்படும் வனவிலங்கு வர்த்தகக் கண்காணிப்புக் குழுவின் தென்கிழக்காசிய திட்ட மேலாளர் கனிதா கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!