அல் ரயான்: வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால் நாடு திரும்பிய இங்கிலாந்து காற்பந்து நட்சத்திரம் ரஹீம் ஸ்டெர்லிங், உலகக் கிண்ணப் போட்டியில் தொடர்ந்து இனி பங்கேற்கவுள்ளார்.
போட்டியின் காலிறுதியாட்டத்தில் இங்கிலாந்தும் பிரான்சும் மோதவுள்ளன. அதற்கு முன்பு ஸ்டெர்லிங் மீண்டும் அணியில் சேர்ந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டில் திருட்டு நேர்ந்ததால் ஸ்டெர்லிங் இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. அதைத் தொடர்ந்து போட்டியின் எஞ்சிய ஆட்டங்களில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாக மாறியது.