நடிகர் சூர்யா, ஜோதிகா தம்பதியர் மும்பையில் குடியேறி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் ஒன்பதாயிரம் சதுர அடி கொண்ட பெரிய வீட்டை இந்த நட்சத்திர ஜோடி அண்மையில் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த வீட்டில் இருந்து சூர்யா வெளியே வரும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
ஜோதிகா தற்போது இந்தி இணையத்தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு இந்தி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வருகின்றன.
இதையடுத்தே மும்பையில் புது வீடு வாங்கி குழந்தைகளுடன் அங்கு உடனடியாகக் குடியேறு வது என முடிவு செய்தாராம் சூர்யா.
சூர்யாவும் நேரடி இந்திப் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே சென்னையில் மிகப்பெரிய வீடு கட்டியுள்ள சூர்யாவும் அவரது சகோதரர் கார்த்தியும் தங்கள் பெற்றோருடன் ஒன்றாக வசித்து வருகின்றனர்.