சேவை, பொருள் குறித்து பயனீட்டாளர் தெரிவித்த புகார்கள் கடந்த ஆண்டில் 9.76 விழுக்காடு குறைந்துள்ளதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் பயனீட்டாளர் சங்கத்தில் 2015ல் 22,319 புகார்கள் செய்யப்பட்டன. 2014ன் 24,721 புகார்களுடன் ஒப்பிட இது குறைவாகும். கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக 'டைம்ஷேர்' துறை தொடர்பாக மிகக் குறைந்த புகார்களே செய்யப்பட்டுள்ளன. 2014ஐ காட்டிலும் சென்ற ஆண்டின் புகார்களின் எண்ணிக்கை 38.3% குறைவாக இருந்ததை புள்ளிவிவரங்கள் காட்டின. இத்துறையில் தவறாக நடக்கும் நிறுவனங்களைச் சமாளிக்க சங்கம் மேற்கொண்ட முயற்சிகள் இதற்குக் காரணம். அதேநேரத்தில் மோட்டார் கார்கள் துறை சார்ந்த புகார்கள் 37.6% அதிகரித்துள்ளது. 2014ல் 2,112 ஆக இருந்த புகார்களின் எண்ணிக்கை 2015ல் 2,907 ஆக உயர்ந்துள்ளன. புகார்கள் அதிகமுள்ள துறையாக நான்காவது ஆண்டாகத் தொடர்ந்து இத்துறை உள்ளது.
பயன்படுத்தப்பட்ட கார்கள் தொடர்பாக சங்கத்திடம் வந்த புகார்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவை குறையுள்ள பொருட்கள் தொடர்பானவை. இதற்கு அடுத்த நிலையில். 1,668 புகார்கள் மின்னியல் துறையில் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது அதிகப் புகார்கள் செய்யப்பட்ட துறையாக, 1,664 புகார்களைப் பெற்ற அழகுப் பராமரிப்புத் துறை உள்ளது. முதல் முறையாக 623 புகார்களுடன் மனமகிழ் மன்றங்களும் பயனீட்டாளர் புகார்கள் அதிகமுள்ள முதல் 10 துறைகளில் இடம்பெற்றுள்ளது. இப் புகார்கள் பெரும்பாலும் உறுப்பினர் உரிமம் ரத்து தொடர்பா னவை என சங்கம் கூறியது.
மோட்டார் வாகனத்துறைக்கு எதிரான புகார்கள் 37.6 விழுக்காடு குறைந்துள்ளன. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்