புதுடெல்லி: பஞ்சாப்பில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை, டெல்லியைத் தாண்டி வங்கக் கடல் வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ‘வேர்ல்டுவிவ்யூ‘’ என்ற செயற்கைக்கோள் எடுத்துள்ள புகைப்படம் இதை உறுதி செய்துள்ளது.
டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசுவுக்கு வாகனப் புகையுடன் அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளில் இருந்து கிளம்பும் புகையும் முக்கியக் காரணங்களாக உள்ளன.
குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மத்திய அரசின் கட்டுப்பாடு உள்ளிட்ட எதையும் மதிக்காமல், விவசாயிகள் தொடர்ந்து தங்கள் நிலங்களில் உள்ள பயிர்க்கழிவுகளை எரித்து வருகின்றனர். கடந்த மாதம் 29ம் தேதி, ஒரேநாளில் 1,068 நிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டு இருக்கின்றன.