சுதாஸகி ராமன்
சுத்தமான காற்று, சேமிக்கப்பட்ட தண்ணீர், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, மனிதர்கள் நீடூழி வாழ ஊட்டச்சத்து ஆகியவற்றை செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் எவ்வாறு விளைவிக்கலாம் என்பது பற்றிய ஆய்வில் சிங்கப்பூரைச் சேர்ந்த 50 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். செவ்வாய் கிரத்திற்குப் பயணம் மேற்கொண்டு அங்கு மனிதர்கள் உயிர் வாழ்ந்து, ஒரு சமூகத்தை உருவாக்குவது பற்றிய சாத்தியக்கூறுகளைக் கண்டறியும் நோக்கத்துடன் இந்த விண்வெளி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'யூத் மிஷன் டு மார்ஸ்' எனப்படும் இந்தத் திட்டப்பணியில் சிங்கப்பூர், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் மாணவர்கள் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுக்கப்பட்ட திட்டப்பணியின் நோக்கத்தை அடைய ஆவன செய்கின்றனர். சிங்கப்பூர் அறிவியல் நிலையம், அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரத்தில் அமைந்திருக்கும் 'ஸ்பேஸ் சென்டர் ஹியூஸ்டன்', பிரான்ஸில் டுலூஸ் நகரத்தின் 'சிட்டி டெ லெஸ்பாஸ்' ஆகியவற்றால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இத்திட்டத்தில் ஈடுபட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த 50 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பொதுவாக உயர்நிலைப் பள்ளிகளில் கற்பிக் கப்படும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட அறிவியல் சார்ந்த விவ ரங்களைக் கற்றுக்கொண்டனர்.
அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்வது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட ஆறு மாணவர்கள், சிங்கப்பூர் அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்த 'ரோபோட்டிக்' பட்டறையில் பங்கேற்றதுடன் இந்தத் திட்டப்பணியில் ஈடுபட்டிருக்கும் செயின்ட் கேப்ரியல் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களுடன் உரையாடினர்.