மாஸ்கோ: பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் தலிபான் அமைப்பு மிகவும் மூர்க்கத்தனமானது என்றும் வன்முறைமிக்கது என்றும் கருதுகின்றன.
ஆனால், தலிபான் அமைப்பின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய ஆட்சிமுறை கடுமையானதல்ல என்று ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பைச் சொல்லிக்கொள்ளும் வகையில் எதிர்த்துப் போரிடும் சில அமைப்புகளில் ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பும் ஒன்று.
மார்ச் 22ல் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது.