இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் களில் எழுவர் மாண்டனர்; 19 பேர் காயமடைந்தனர். மாண்டோரில் தற்கொலைப் படை யினர் இருவர் உட்பட ஐந்து பயங்கர வாதிகளும் அடங்குவர். மற்ற இருவரில் ஒருவர் போலிஸ் அதிகாரி; இன்னொருவர் கனடாவைச் சேர்ந்தவர்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தூதரகங்களும் ஐநா மன்ற நிறுவனங்கள் பலவும் அமைந்துள்ள வட்டாரத்தில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்தத் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, "எம் நாடும் எம் மக்களும் பயப்பட மாட்டோம். இத்த கைய பயங்கரவாதச் செயல்களால் எங் களைத் தோற்கடிக்க முடியாது," என்றார்.
மாலையில் அவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதற்கிடையே, "இது நிச்சயமாக ஐஎஸ் அமைப்பின் வேலைதான்," என்று உறுதியாகச் சொன்னார் ஜகார்த்தா போலிஸ் தலைவர் கர்ணாவியன்.
தாக்குதலில் மாண்ட சிலரின் உடல்கள் சாலையில் சிதறிக்கிடக்க, கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பாக காருக்குப் பின்னால் மறைந்தபடி பயங்கரவாதிகளை எதிர்கொள்ள விரையும் இந்தோனீசிய போலிசார். படம்: ராய்ட்டர்ஸ்