ராமநாதபுரம்: அரசியல் கட்சிகள் சாதிகளை ஒழிப்போம் என தங்க ளது தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தி உள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள தனி யார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் சாதிப் பிரிவினைகள் ஒழிய வேண்டும் என வலியுறுத்தினார்.
"நம்முடைய நாட்டில்தான் தெருக்களுக்கு சாதிப் பெயர்களை வைத்தனர். எனினும் இப்போது அப்பெயர்களை எல்லாம் நீக்கிவிட்டனர். ஆனால் இன்னும் சாதிகள் ஒழியவில்லை," என்றார் வைரமுத்து. கல்லூரிக்குள் வரும்போது அனைவருமே மாணவிகளாக மட்டுமே உள்ளனர் என்றும் அவர்கள் மத்தியில் சாதி அடையாளங்கள் இருப்பதில்லை என்றும் குறிப்பிட்ட அவர், ஆண்களின் பின்னால் மட்டுமே சாதிகள் ஒட்டிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
"எந்தப் பெண்ணும் தன் பெய ருக்கு பின்னால் சாதிப் பெயரைப் பயன்படுத்துவதில்லை. மாணவ சமுதாயம் படிப்பில் மட்டுமே கவ னம் செலுத்த வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்று தற்கொலை செய்யாதீர்கள். வரும் தேர்தலில் அரசியல் தலை வர்கள் தங்களது தேர்தல் அறிக் கையில் சாதிகளை ஒழிப்பது குறித்து அறிவிக்க வேண்டும்," என்றார் கவிஞர் வைரமுத்து.