வாஷிங்டன்: கனடாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சிங்கப்பூரில் நடைபெறும் உச்சநிலைச் சந்திப்பு அமைதிக் கான ஒரே முயற்சி என்று தெரி வித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புவாய்ந்த டிரம்ப்-கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நாளை நடைபெறுகிறது. உலக நாடுகள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கிடக் கின்றன. இந்த நிலையில் நேற்று சிங்கப்பூர் செல்லும் வழியில் பேசிய அதி பர் டிரம்ப், 'அமைதி யைக் குறிக்கோளாகக் கொண்ட சந்திப்பு' என்று வருணித்தார்.
இதற்கிடையே வடகொரியத் தலைவர் கிம் நேற்று தனது பாது காவலர்களுடன் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். திரு கிம் அடியெடுத்து வைத்துள்ள 3வது நாடு சிங்கப்பூர்.
கனடாவில் நிறுத்தப்பட்டிருந்த 'ஏர்ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில் ஏறி சிங்கப்பூர் புறப்பட்ட அதிபர் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்