சிங்கப்பூரில் 'உபர்', 'கிராப்கார்' கைபேசி செயலிகளின் கீழ் செயல்படும் தனியார் ஓட்டுநர் களின் சேவைகள் ஒழுங்கு படுத்தப்படும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. பயணிகளின் நலன்களைக் கருத்தில்கொண்டு இந்த நட வடிக்கை மேற்கொள்ளப்படுவ தாகவும் கூறப்பட்டது. டாக்சி ஓட்டுநர்களைப் போன்றே தனியார் ஓட்டுநர்களும் மருத்துவ சோதனைகளுக்கு உட்பட வேண்டும். அவர்களின் பின்னணி விவரங்கள் பரி சீலிக்கப்படும். அதோடு தொழில் உரிமத்தையும் அவர்கள் பெற்றாக வேண்டும். இத்தகைய ஓட்டு நர்கள் குற்றப்புள்ளிகளின் கீழ் வருவதும் அவசியமாகிறது.
உபர், கிராப்கார் ஓட்டுநர்கள் வருங்காலத்தில் உரிமம் பெறுவது அவசியமாகிறது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்