மதுரை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கணித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலக் கூட்டணி யானது தமிழக அரசியலில் பிரமிக்கத்தக்க மகத்தான திருப்பத்தை ஏற்படுத்தப் போகி றது என்றும் தெரிவித்தார்.
ஊழல் இல்லாத ஆட்சி, மதுவை ஒழிக்கிற ஆட்சி, லஞ்சமில்லாத வெளிப்படையான கூட்டணி ஆட்சியை மக்கள் நலக் கூட்டணி ஏற்படுத்தும் என்றும் மக்களுக்காகப் பணி யாற்றுவதே மக்கள் நலக் கூட்ட ணியின் முதன்மை நோக்கம் என்றும் அவர் கூறினார். "தமிழகத்தில் இதுவரை தொகுதி உடன்பாடுகளுக்காக மட்டுமே பல்வேறு கூட்டணிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் முதல்முறையாக கொள்கைக் காக குறைந்தபட்ச செயல் திட்டம் அமைத்து இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம்.
"கடந்த சில மாதங்களாக இணைந்து பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டுள்ளோம். வெள்ள நிவாரணப் பணிகளி லும் ஈடுபட்டோம். அதன் கார ணமாக எங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள் ளது. நெருக்கமும் நேசமும் நிலவுகிறது," என்றார் வைகோ. தமிழகத்தில் இதுவரை அமைந்த கூட்டணிகளில் இத்த கைய புரிந்துணர்வும் நெருக்க மும் காணப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட அவர், மாற்று அரசி யல் எழுச்சிக்காகவே மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட் டது என்று விவரித்தார்.