ஒரு காலத்தில் வெளிநாட்டவர், குறிப்பாக மலேசிய நாட்டவர்கள் விரும்பிச் செல்லும் பொழுது போக்கு இடமாகத் திகழ்ந்தது புக்கிட் தீமா கடைத் தொகுதி. காலப்போக்கில் பல்வேறு காரணங் களால் அங்குள்ள கடைகள் பல இடம்பெயர்ந்தன; சில மூடப்பட் டன. அவ்விடம் வாடிக்கையாளர் கள் பலரை இழந்தது. பொலிவிழந்த அக்கடைத் தொகுதியை மீண்டும் மக்கள் ஒன்றுகூடும் இடமாக உருவாக்கு வதற்கு, கடைத் தொகுதியின் கட்டட வடிவமைப்பை மாற்றியமைப் பதோடு அந்த இடத்தையும் உரு மாற்றும் திட்டத்தை தயாரித்துள் ளார் செல்வி மதுமிதா தங்கமணி, 19.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரியில் கட்டட வடிவமைப்புத் துறையில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவியான செல்வி மதுமிதா, பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக புக்கிட் தீமா கடைத் தொகுதிக்கு புதுப்பொலிவு தரும் புதிய வடிவமைப்புக் கண் காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். 'ஆர்கிஃபெஸ்ட்' 2018 என்ற வருடாந்திர விழாவின் ஓர் அங்க மாக செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கி இரு வாரங்க ளுக்கு இக்கண்காட்சி நகர மறுசீரமைப்பு ஆணையத்தில் இடம்பெற்றது. மதுமிதாவுடன் மேலும் நான்கு மாணவர்கள் இத்திட்டத்தில் ஈடுபட்டனர். 'ஆர்கிஃபெஸ்ட்' இவ்வாண்டு 150,000க்கும் மேற்பட்ட பார்வை யாளர்களை ஈர்த்தது. பல நாடு களைச் சேர்ந்த கட்டட வடிவமைப் பாளர்கள், நிபுணர்கள் ஆகியோ ருடன் பல கலந்துரையாடல்களும் நடைபெற்றன.
புக்கிட் தீமா கடைத் தொகுதியை மாற்றியமைப்பதற்கான வடிவமைப்பை செல்வி மதுமிதா தங்கமணி உட்பட ஐந்து பேர் அடங்கிய குழு உருவாக்கியுள்ளது. படம்: சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரி