ஜகார்த்தா: சென்ற வாரம் இந்தோனீசிய கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் உதிரிப் பாகங்களை மீட்புக் குழுவினர் மீட்டு வரும் வேளையில் தேடும் பணி மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. விமான விபத்தில் இறந்தவர் களின் எஞ்சிய உடற்பாகங்களை மீட்கவும் இரண்டாவது கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்கவும் தேடுதல் பணியை இன்று முதல் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க தாங்கள் தீர்மானித்ததாக இந் தோனீசிய தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் தலைவர் முகமட் சயாவுஜி கூறினார்.
லயன் ஏர் விமானம் ஒன்று கடந்த திங்கட்கிழமை ஜாவா கடற் பகுதியில் விழுந்து நொறுங்கிய தில் அந்த விமானத்தில் சென்ற 189 பேரும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் எஞ்சிய உடற்பாகங்கள் அடங்கிய 105 பைகள் இதுவரை மீட்கப் பட்டுள்ளன. அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கடலுக்கடியிலிருந்து மீட்கப்பட்ட விமானத்தின் சக்கரங்கள், இருக்கைகள் உட்பட பல உதிரிப் பாகங்களை இந்தோனீசிய மீட்புக் குழுவினர் ஜகார்த்தா விமான நிலையத்தில் இறக்குகின்றனர். படம்: ஏஎஃப்பி