சென்னை: வளைகுடா நாடுகளுக்குப் பணி நிமித்தம் செல்லும் தமிழர்கள் அங்கு பல்வேறு கொடுமை களுக்கு ஆளாக்கப்படுவது குறித்தும், கொத்தடிமை களாக நடத்தப்படுவது குறித்தும் தொடர்ந்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக தமிழகத் தில் புதிய அமைச்சு ஏற்படுத்தப்பட வேண்டும் என அறிக்கை ஒன்றில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"வளைகுடா நாடு களுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் அதிர்ச்சி அளிக் கின்றன. சவூதி அரேபியா உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகளில் பணிக்குச் சென்ற இந்திய தொழிலா ளர்கள் 24,570 பேர் கடந்த ஆறு ஆண்டுகளில் உயிரிழந்திருக்கின்றனர்," என்று ராமதாஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.
வளைகுடா நாடுகளில் தினந்தோறும் 10 இந்தியர்கள் உயிரிழந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியர்களின் உயிரைக் காக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2012 முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரை அதிகபட்சமாக சவூதி அரேபியாவில் 10,414 பேர் உயிரிழந்திருப்பதாகவும், குறைந்தபட்சமாக பஹ்ரை னில் 1317 பேர் இறந்துள்ளதாகவும் புள்ளி விவரங் களை வெளியிட்டுள்ளார்.