ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தரைத்தள ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை- நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் விமான சேவை பாதிக்- கப்பட்டுள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் களுக்கு தீபாவளி போனஸ் வழங்- கப்படாததால் அவர்கள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கிட்டத்தட்ட 400 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. மும்பையிலிருந்து புறப்பட வேண்டிய ஏறக்குறைய 16 உள்நாட்டு விமானங்களும் எட்டு அனைத்துலக விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.
பேங்காக் செல்லும் விமானம் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னிரவு 1.30 மணிக்கு புறப்- படவேண்டிய மும்பை=நியூவார்க் விமானம் அதிகாலை 4.08க்கு புறப்பட்டது. விமான பயணிகள் பரிசோ- தனை, சரக்குகள் ஏற்றி இறக்கும் பணி, விமானத்தைச் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட முக்கியப் பணிகளும் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டன. "திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப் படையில் பணிபுரிகின்றனர். விமானச் சேவையைத் தொடர்ந்து வழங்க ஏர் இந்தியாவின் நிரந்தர ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்," என அந்த அதிகாரி கூறினார். நிலைமையைச் சரிசெய்ய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா அதிகாரிகள் பேச்சு- வார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.