சென்னை: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்தடித்தது. தொடக்க ஆட்டக் காரர்களான ஹே ஹோப்பும் ஷிம்ரோன் ஹெட்மையரும் அதிரடியாக ஆடியதால் 6 ஓவர்களில் அந்த அணி 50 ஓட்டங்களை எடுத்தது. இவர்கள் இருவரையும் சுழல்பந்து வீச்சாளர் சாஹல் பிரித்தார்.
இதனால் அந்த அணியின் ஓட்டம் வேகம் குறைந்தது. அடுத்து இறங்கிய டேவன் பிராவோ பொறுப்புடன் ஆடினார். இவருக்கு நிக்கலஸ் பூரன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சற்று நேரம் பொறுமையாக ஆடிய இவர்கள் தங்களது அதிரடியைத் தொடர்ந்தனர். நிக்கலஸ் பூரன் நான்கு சிக்சர் கள் அடித்து ஆட்டத்தை உற்சாக மாக்கினார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்களை எடுத்தது. டேரன் பிராவோ 43 ஓட்டங்களுடனும் நிக்கலஸ் பூரன் 25 பந்துகளில் 53 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா சார்பில் சாஹல் 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்கமாக ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் இறங்கினர். ரோகித் சர்மா 4 ஓட்டங் களிலும் லோகேஷ் ராகுல் 17 ஓட்டங்களிலும் நடையைக் கட்டினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் முதலில் நிதானமாகப் பந்தடித்தார். தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் இவருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சைப் பதம் பார்த்தனர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
19வது ஓவரில் ரிஷப் பந்த் 38 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். தவான்=பந்த் ஜோடி 130 ஓட்டங்கள் சேர்த்து அசத்தியது. ஷிகர் தவான் 62 பந்துகளில் 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுடனான டி20 தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது.