சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் பாரதிய ஜனதா அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதையடுத்து பாஜகவுக்கு எதிராக அமைய உள்ள புதிய கூட்டணியில் திமுக இடம்பெறு வது உறுதியாகிவிட்டதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜகவுடன் கூட்டணி வைத் திருந்த தெலுங்கு தேசம் கட்சி அதிலிருந்து விலகி உள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்துடன் தேசிய, மாநில அளவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக் கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இது தொடர்பாக அவர் பல் வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அண்மையில் மு.க. ஸ்டாலினையும் அவர் சந் தித்துப் பேசினார். இதையடுத்து அவரது முயற்சிக்கு திமுக ஆதரவளிக்கும் என ஸ்டாலின் அறிவித்தார்.
மு.க. ஸ்டாலினைச் சந்தித்த சீதாராம் யெச்சூரி. படம்: சதீஷ்