நாகை: சுனாமியின் போது நாகையில் உயிர் தப்பிய இரு பெண் குழந்தைகளைச் சுகாதாரத் துறை செயலர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் அங்குள்ள காப்பகம் ஒன்றில் அனுமதித்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் புயல் நிவாரணப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அவர், அவ்விரு சிறுமிகளைக் காண காப்பகம் சென்றார். எனினும் அவர்களில் மீனா என்ற சிறுமி மட்டுமே காப்பகத்தில் இருந்தார். ராதாகிருஷ்ணனைக் கண்ட மீனா, அவரைப் பாசத்துடன் 'அப்பா' என்று அழைத்த போது காப்பகத்தில் இருந்த அனைவரும் நெகிழ்ந்து போயினர். இதையடுத்து மீனாவுக்குப் அன்புடன் சில அறிவுரைகளைக் கூறிய ராதாகிருஷ்ணன், தனது பராமரிப்பின் கீழ் கல்லூரியில் படித்து வரும் மற்றொரு பெண்ணான சௌமியாவைக் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இரு குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்த்து ஆளாக்கும் அவரைக் காப்பக நிர்வாகிகள் பாராட்டினர்.
ஆதரவற்ற குழந்தைகள்: பாசத்துடன் வளர்த்து வரும் அரசு செயலர்
15 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Dec 2018 08:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!