ஷில்லாங்: மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் இயங்கி வந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத் திற்குள் திடீரென வெள்ளம் புகுந்தது. கடந்த மூன்று நாட் களாக வெள்ளநீர் சுரங்கத்திற் குள் சூழ்ந்துள்ளதால் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 13 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்று இன்னமும் தெரியவில்லை. சுரங்கத்திற்குள் சிக்கியவர் களை மீட்கும் பணி தொடர்கிறது. பணிக்குச் சென்றவர்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்பட்டு வரு கிறது.
மேகாலயாவில் இயங்கி வந்த இந்த நிலக்கரி சுரங்கம் பாது காப்பற்றது எனக் கூறி கடந்த 2014ஆம் ஆண்டு இந்தச் சுரங் கத்திற்கு தேசிய பசுமை தீர்ப் பாயம் தடை விதித்தது. இருப்பினும் சட்டவிரோதமாக தொடர்ந்து இந்தச் சுரங்கம் இயக்கப்பட்டு வந்துள்ளது. மிகக் குறுகிய அளவில் பாதை கொண்ட இந்தச் சுரங்கம் லைடின் நதிக்கு அருகே அமைந் துள்ளது. கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் இந்த சுரங்கத் தில் வேலை பார்த்து வந்த நிலை யில் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.