பெர்த்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை நேற்று தொடங்கியது. தொடக்க வீரர்கள் சொல்லும்படியாக ஓட்டங்களைக் குவிக்கத் தவறினர். தொடக்க வீரர் முரளி விஜய் ஓட்டம் எதுவும் எடுக்காமல் 'டக் அவுட்'டில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவரை அடுத்து லோகேஷ் ராகுல் இரண்டே ஓட்டங் களில் வெளியே றினார். இதனால் இந்திய அணி எட்டு ஓட்டங்களை எடுப்ப தற்குள் இரு விக்கெட்டு களை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய புஜா ராவுடன் அணித் தலைவர் விராத் கோஹ்லி இணைந்தது ஆட்டத் தின் திருப்பு முனையாக அமைந்த து. இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களை எடுத்து, இந்திய அணியைச் சரி விலிருந்து மீட்டன ர்.
இருவரும் சேர்ந்து 74 ஓட்டங் களைச் சேர்த்த நிலையில், புஜாரா வெளியேற நேரிட்டது. 24 ஓட்டங் களுடன் அவர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அஜிங் கியா ரகானே களமிறங்கி னார். அவரும் கோஹ்லியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப் படுத் தினர். தங்களுக்குக் கிடைத்த வாய்ப் புகளைப் பயன்படுத்தி 'பவுண்டரி'க ளை விளாசினர். இருவரும் மிகச் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்து அணியினரையும் ரசிகர் களையும் உற்சாகப்படுத்தினர்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளும் அணித் தலைவர் விராத் கோஹ்லி (இடது), துணைத் தலைவர் ரகானே. படம்: ஏஎஃப்பி