சிட்னி: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 34 ஓட்டங்களில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று அதிர்ச்சி அளித்தது. டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், முதல் போட்டியிலேயே சறுக்கியதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந் தனர். பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் ஃபிஞ்ச் இந்திய அணியை முதலில் பந்து வீசும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்கப் பந்தடிப்பா ளர்களாக ஃபிஞ்ச்சும் அலெக்ஸ் கேரியும் களமிறங்கினர். ஆறு ஓட்டங்கள் எடுத்த நிலை யில் ஃபிஞ்ச்சும் கேரி 24 ஓட்டங் களிலும் ஆட்டமிழக்க, ஆஸ்தி ரேலிய அணி சரிவுகாணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உஸ்மான் கவாஜா (59), ஷான் மார்ஷ் (54), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் (73), மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் (47*) ஆகிய நடு வரிசை ஆட்டக்காரர்கள் அருமை யாக ஆட, அந்த அணி 50 ஓவர் களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்களை எடுத்தது. பலமான பந்தடிப்பு வரிசையைக் கொண்டுள்ள இந்திய அணி இந்த இலக்கை எளிதாக எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு.