சிங்கப்பூரின் ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தொடர்பான விதிமுறை கள் மேலும் கடுமையாக்கப்பட இருக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட இந்த மாற்றங்கள் இன்னும் மறுஆய்வு செய்யப்படுகின்றன.
அதில் இணையம்வழி கட்டாயப் பயிற்சித் திட்டம், ஆளில்லா வானூர்தி இயக்குபவருக்கான உரிமத் திட்டம், 25 கிலோகிராமுக்கு மேற்பட்ட எடையுள்ள ஆளில்லா வானூர்திக்கு பகுதி அல்லது முழுமையான சான்றிதழ் திட்டம் போன்றவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதத்தில் பிரிட்டனின் கெட்விக் விமான நிலையத்திற்கு அருகில் ஆளில்லா வானூர்திகள் பறந்ததன் காரணமாக 1,000க்கு மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது மாற்றிவிடப்பட்டன.
இதன் காரணமாக ஆளில்லா வானூர்திகளின் பயன்பாடு தொடர்பான மறுபரிசீலனை தலை தூக்கி உள்ளது.
தற்போதுள்ள சிங்கப்பூர் விதி முறைகளின்படி விமான நிலை யங்கள் அல்லது ராணுவ விமானத் தளங்களுக்கு அப்பால் ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்குள் ஆளில்லா வானூர்திகளை அனுமதியின்றிப் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
'நகர்ப்புற வாழ்க்கைக்கான தீர்வுகள் தொடர்பில் 'ட்ரோன்' தொழில் நுட்பத்தைப் பயன்படுத்து தல்' என்னும் அதன் முதல் மாநாட்டைத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் நேற்று ஏற்பாடு செய்திருந் தது.
ஆளில்லா வானூர்தி சட்டங்கள் மறுஆய்வு
24 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2019 10:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!