அபுதாபி: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரை இறுதிச் சுற்றில் நேற்று முன்தினம் கத்தார் குழு 4-0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு சிற்றரசுகளைத் தோற்கடித்து முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்து உள்ளது.
அந்தக் குழுவின் போலெம் கோகி (22வது நிமிடம்), அல்மோஸ் அலி (37வது நிமிடம்), ஹசன் அல் ஹைடோஸ் (80வது நிமிடம்), ஹமித் இஸ்மாயில் (90வது நிமிடம்) ஆகியோர் கோல்களைப் போட்டு குழுவிற்கு அபார வெற்றியைத் தேடித் தந்தனர்.
முன்னதாக கத்தார் குழு கோல் அடித்தபோது, சினமடைந்த உள்ளூர் ரசிகர்களில் சிலர் அரங்கிற்குள் காலணிகளைத் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு நிறுத்திவிடாமல் இன்னொரு முறை தண்ணீர் போத்தல்களை எறிந்தனர்.
இதனால் இரண்டு முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. கத்தாருக்கு எதிராக ரசிகர்கள் அவ்வப் போது கோஷங்கள் எழுப்பியதால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது.
நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கத்தார் குழு ஜப்பானை எதிர்கொள்கிறது.
ஆசியக் கிண்ணக் காற்பந்து: இறுதிச் சுற்றில் கத்தார்
31 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Jan 2019 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!