புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் நேற்று முன்தினம் இடைக்கால நிதிநிலை அறிக் கையைத் தாக்கல் செய்தபோது மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை (படம்) அறையில் இல் லாதது அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிதிநிலை அறிக்கை மீதான உரையை புறக்கணித்ததன் மூலம், பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை மறைமுகமாக அவர் பதிவு செய்தி ருப்பதாகக் கருதப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அண்மைக்காலமாக மத்திய அரசை அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருகிறார் தம்பிதுரை.
குறிப்பாக உயர்சாதியினருக் கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால நிதிநிலை அறிக் கையைத் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால் அதிமுக மூத்த தலை வர்களில் ஒருவரான தம்பிதுரை, அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது அவைக்கு வராமல் புறக் கணித்துள்ளார். ஏற்கெனவே அதிமுகவைச் சேர்ந்த இவரும், சில முக்கிய தலைவர்களும் பாஜக உடனான கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக அண்மையில் தகவல் வெளியானது.
அவையை புறக்கணித்த தம்பிதுரையால் சலசலப்பு
3 Feb 2019 02:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!