சிவகங்கை: திமுக ஆட்சி அமைந்தவுடன் கீழடிப் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
நேற்று முன்தினம் கீழடியில் தொல்லியல் ஆய்வு நடக்கும் பகுதிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு ஏற்கெனவே 4 கட்டங்க ளாகத் தொல்லியல் ஆய்வு நடந்துள்ளது.
ஆய்வுப் பகுதியைப் பார் வையிட்ட பின்னர் அப்பகுதி மக்களுடன் அவர் சில நிமிடங்கள் பேசினார்.
இதையடுத்துச் செய்தி யாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசால் திட்டமிட்டுத் தொல்லியல் ஆய்வுப் பணிகள் புறக் கணிக்கப்படுவதாகக் கீழடி மக்கள் தம்மிடம் வேதனை யுடன் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
"இங்கு ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள் ளது. இங்கு தொடர்ந்து விரிவான ஆய்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.
"இதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் கீழடியில் நிச்சயம் அருங்காட்சியம் அமைக்கப்படும்," என்றார் மு.க. ஸ்டாலின்.
இதற்கிடையே கீழடியில் மு.க. ஸ்டாலினைக் கண்ட தனியார் பள்ளி மாணவர்கள் உற்சாக மிகுதியில் குரல் எழுப்பினர். இதைப் பார்த்த மு.க. ஸ்டாலினும் உற்சாகமடைந்து தனது காரில் இருந்து இறங்கிச் சென்று சிறுவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார்.
கீழடி ஆய்வு தொடர வேண்டும்
7 Feb 2019 00:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Feb 2019 00:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!