ஹேமில்டன்: நியூசிலாந்து மண்ணில் முதன்முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி சாதிக்கும் முனைப்புடன் அவ்வணிக்கு எதிராக இன்று நடக்கவிருக்கும் மூன் றாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கவுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தமட்டில் கடந்த மூன்று மாத காலமும் மறக்க முடியாத தருணமாகிவிட்டது. ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொட ரையும் இருதரப்பு ஒருநாள் தொடரையும் வென்ற இந்திய அணி, அதன்பின் நியூசிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரையும் ஆகப் பெரிய வித்தியாசத்தில் கைப்பற்றி யது.
இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் வென்று டி20 தொடரையும் இந்திய அணி தன்வசமாக்கும் பட்சத்தில் அது பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் ஆகி விடும்.
முதல் டி20 போட்டியில் மரண அடி வாங்கியபோதும் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய வீரர்கள் எழுச்சியுடன் ஆட, தொடர் 1-=1 எனச் சமனுக்கு வந்தது.
முதல் இரு போட்டிகளில் விளையாடிய அதே பதினொருவரையே இந்திய அணி இன்றும் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை அணியில் ஏதேனும் மாற்றம் செய்ய நிர்வாகம் நினைத்தால், யுஸ்வேந்திர சகலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம்.
கடந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்ததோடு அனைத்துலக டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தோர் பட்டியலில் முதலிடத் தையும் எட்டினார் இந்திய அணியின் தற்காலிகத் தலைவரான ரோகித் சர்மா. இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானுடன் இணைந்து இன்றைய ஆட்டத்திலும் அவர் நல்லதோர் அடித்தளத்தை அமைத்துத் தந்தாலே பாதிக் கிணறு தாண்டியது போலத்தான்.
அதே வேளையில், இந்திய அணிப் பந்துவீச்சாளர்களும் இரண்டாவது ஆட்டத்தில் இருந்ததைப் போன்ற செயல்பாட்டை இன்றும் வெளிப் படுத்த வேண்டியது அவசி யம்.
ஏனெனில், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கோலின் மன்ரோவும் டிம் சைஃபெர்ட்டும் அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போனவர்கள்.
ஒருநாள் போட்டித் தொடரை இழந்துவிட்ட நிலையில், டி20 தொடரை ஏனும் வென்று ரசிகர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க வேண்டிய இக்கட்டில் நியூசிலாந்து இருக்கிறது.
அதற்கு நடுவரிசைப் பந்தடிப்பாளர்களும் கைகொடுக்க வேண்டும் என அந்த அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
முதல் இரு போட்டிகளில் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் கஹலைனுக்குப் பதிலாக பிளேர் டிக்னர் அல்லது டக் பிரேஸ்வெல் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
சிங்கப்பூர் நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்குப் போட்டி தொடங்கும்.
இன்னொரு தொடருக்கு இலக்கு
10 Feb 2019 04:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!