ஜெய்ப்பூர்: சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தி யின் கணவருமான ராபர்ட் வத்ரா தன் தாயாருடன் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் முன்னிலையானார்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராஜஸ்தான் பிகானிரில் வத்ராவுக் குத் தொடர்புடைய நிறுவனம், 2015ல் மிகவும் குறைந்த விலை யில் நிலங்களை வாங்கி பின்னர் அதிக விலைக்கு அந்த நிலம் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டு உள்ளது. இதில் மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்னிலையாகும்படி மூன்று முறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியும் வத்ரா முன்னிலையாகவில்லை.
இந்த நிலையில் வத்ராவும் அவரது தாயார் மவ்ரீனும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
அதன்படி ஜெயப்பூரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வத்ரா வும் அவரது தாய் மவ்ரீனும் நேற்று முன்னிலையாகினர்.
அமலாக்கத்துறை முன் வத்ரா முன்னிலையாவது இது நான் காவது முறையாகும். இதற்கு முன்பு வெளிநாடுகளில் சொத்து வாங்கியது தொடர்பில் வத்ராவிடம் மூன்று நாட்கள் விசாரணை நடை பெற்றது. இதற்கிடையே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரி யங்கா, அமலாக்கத் துறையில் முன்னிலையாகும் தன் கணவர் ராபர்ட் வத்ராவுக்காக நேற்று முன்தினம் மாலை ராகுல் காந்தி யுடன் ஜெய்ப்பூர் விரைந்தார்.
பின்னர் ஜெய்ப்பூரில் அம லாக்கத் துறை விசாரணைக்காக வந்த தன் கணவருடனும் மாமியார் மவ்ரீனுடம் பிரியங்கா காந்தியும் சேர்ந்துகொண்டார். ராகுல் காந்தியும் அவர்களுக்குத் துணையாக இருந்தார்.
விசாரணைக்குத் தாயாருடன் வந்த பிரியங்காவின் கணவர்
13 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Feb 2019 07:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!