முன்னாள் சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ் வர ராவுக்கு ஒரு நாள் தண்டனை 

புதுடெல்லி: முன்னாள் சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ் வர ராவ், ஒரு நாள் முழுவதும் நீதி மன்ற அறையிலேயே தங்க வேண்டும் என்று நேற்று நீதி மன்றம் வழக்கு ஒன்றில் உத்தர விட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி அவர் அதிகாரிகளைப் பணி யிட மாற்றம் செய்தார்.
அதாவது சிபிஐ அதிகாரி ஏ.கே. ஷர்மாவை பணியிட மாற்றம் செய்த வழக்கில் நாகேஸ்வர ராவ் நேற்று முன்தினம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை இதே வழக்கில் அவர் நீதிமன்றத் தில் முன்னிலையானார்.
அப்போது, வழக்கு விசா ரணையை முடித்து உத்தரவைப் பிறப்பித்த உச்ச நீதிமன்றம், நீதி மன்ற உத்தரவை மீறி செயல்பட்ட நாகேஸ்வர ராவ், இன்று ஒரு நாள் முழுவதும் நீதிமன்ற அறையிலேயே அமர்ந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 7ஆம் தேதி உச்ச நீதி மன்றம் அவருக்கு நீதிமன்ற அவ மதிப்பு கடிதம் அனுப்பியிருந்தது.
இதற்கு உச்ச நீதிமன்றத்தில் நாகேஸ்வர ராவ் தனது பதிலைப் பிரமாண பத்திரமாக நேற்று தாக்கல் செய்தார். அதில் அவர், "எனது தவற்றை உணர்ந்து கொண்டேன். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீற வேண்டும் என்ற விருப்பமோ, உள்நோக்கமோ எனக்குக் கனவில்கூடத் துளியும் கிடையாது," எனத் தெரிவித் திருந்தார். இதையடுத்து நேற்று காலை முன்னிலையான நாகேஸ்வர ராவுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு நாள் நீதிமன்ற அறையில் தங்க உத்தரவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!