தூத்துக்குடி: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் நோக்கம் என்ன, தேவை என்ன? என்பது புரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் மன்னிக்க முடியாத பெரும் கொடுஞ்செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பாதுகாப்புப் படைக்கே போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும், இதை நினைக்கும்போது பதற்ற மாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
"நம் பிரதமரும் இந்திய ஆட்சியாளர்களும் பண மதிப்பிழப்பின் மூலம் தீவிரவாதத்தை ஒழித்துவிட்டதாகக் கூறினர். இந்நிலையில் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது.
"350 கிலோ வெடிமருந்தை ஏற்றிக்கொண்டு அந்த வாகனம் வந்த வழியில் சோதனைச் சாவடி இருந்ததா? நம் நாட்டில் உளவுக் கட்டமைப்பு என்பது இருக்கிறதா, இல்லையா?" என்று தூத்துக்குடியில் பேட்டி யளித்த சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
மத்திய அரசு மக்களை மட் டுமே அச்சுறுத்தி வைத்திருப்ப தாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் கட்டமைப்பு பலவீனமாக இருக்கிறதோ எனும் சந்தேகம் எழுவதாகக் கூறினார்.
பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பற்ற நிலை பதற்றம் அளிக்கிறது: சீமான் கவலை
18 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2019 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!