இ.எஸ்.ஜே சந்திரனுடன் கலந்துரையாடல்

சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் கடந்த மாதம் 17ஆம் தேதியன்று 'திரு இ.எஸ்.ஜே. சந்திரனுடன் கலந்துரையாடல்' எனும் நிகழ்ச்சியை நடத்தியது.


இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட உள்ளூர் கலைஞர்கள் கலந்துகொண்ட னர்.


சிங்கப்பூர் தொலைக்காட்சியில் முன்பு மூத்த நிர்வாகத் தயாரிப்பாளராகவும் தமிழ்ப் பிரிவுத் தலைவராகவும் இருந்தார் திரு சந்திரன்.


ரசிகர்களை ஈர்ப்பதற்குத் தாம் மேற்கொண்ட தயாரிப்பு உத்திகளை அவர் எடுத்துரைத்தார். தாம் சந்தித்த சவால்கள் பற்றி அவர் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.


அன்று தம்மோடு இணைந்து பணியாற்றிய கலைஞர்கள் சந்தித்த சவால்கள், அவர்களுக்குத் தரப்பட்ட வேடங்களைத் தாம் தேர்ந்தெடுத்த விதம் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.


நிகழ்ச்சிக்கு வந்திருந்த பழம்பெரும் உள்ளூர் நடிகர்களான ஜெயராம், நாராயணசாமி, குணசீலன் போன்றோரும் திரு சந்திரனின் இயக்கத்தில் தாங்கள் நடித்த மேடை, தொலைக்காட்சி நாடகங்களின்போது நடந்த சுவையான சம்பவங்களை நினைவுகூர்ந்தனர்.


சங்கத்தின் விதிமுறைகளையும் கோட்பாடுகளையும் எழுதியவர் திரு சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!