அடிஸ்அபாபா நகரிலிருந்து நைரோபிக்குப் பறந்துகொண்டிருந்த எத்தியோப்பிய விமானம் நேற்றுக் காலையில் விபத்துக்குள்ளாகி விழுந்துவிட்டது என்று அந்த நாட்டின் பிரதமர் அகம்மது அறிவித்தார்.
அந்த விமானத்தில் 149 பயணிகளும் எட்டு விமான ஊழியர்களும் இருந்ததாகவும் பயணிகள் 33 நாடுகளைச் சேர்ந்த வர்கள் என்றும் யாரும் உயிர்பிழைக்க வில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.
தலைநகர் அடிஸ்அபாபாவுக்கு 62 கி.மீ. தென்கிழக்கே இருக்கும் பிஃஷோது என்ற நகருக்கு அருகே அந்த போயிங் 737-800 மேக்ஸ் விமானம் விபத்துக்குள் ளாகிவிட்டது.
விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.44 மணிக்கு விபத்துக்குள்ளானது என்று தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத விமான நிறுவன பேச்சாளர் தெரிவித்தார். விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கு எத்தியோப்பிய பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
"விமானம் கென்யா நாட்டின் நைரோபி நகருக்குப் பறந்துகொண்டிருந்தது. எதிர் பாராதவிதமாக திடீரென்று அது விபத் துக்குள்ளாகிவிட்டது. அந்த விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை பிரதமர் அலுவலகம் தெரிவித்துக்கொள் கிறது," என்று நேற்று அந்த அலுவலகம் டுவிட்டரில் குறிப்பிட்டது.
எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளாகி 157 பேரும் பலியாயினர்
11 Mar 2019 08:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Mar 2019 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!