யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் போராளிகள் நடத்திய தாக்குதலில் போலிஸ்காரர்கள் 9 பேர் கொல்லப்பட்டதாக மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ராக்கைன் மாநிலத்தில் அடிக்கடி இன மற்றும் சமயக் கலவரம் நடப்பதால் அங்கு பதற்றம் நீடிக்கும் வேளையில் அங்குள்ள ஒரு கிராமத்தில் போலிசாரைக் குறிவைத்து போராளிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக அந்த அதிகாரி சொன்னார்.
அத்தாக்குதலில் போலிஸ்காரர் கள் 9 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயம் அடைந்ததாகவும் இன்னும் ஒருவரைக் காணவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.
அந்த போலிஸ் நிலையத் திலிருந்து ஆயுதங்களையும் போராளிகள் அபகரித்துச் சென்ற தாகவும் கூறப்படுகிறது.
அத்தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
ராக்கைன் மாநிலத்தில் உள்ள மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருவதாகக் கூறி வரும் அரகான் ராணுவம் எனும் போராளிகள் குழு அண்மைய மாதங்களில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து பல தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதனால் அரகான் ராணுவத் தைச் சேர்ந்த போராளிகள் மீது ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. போராளிகளின் இலக்குகள் மீது ராணுவம் குண்டு களை வீசித் தாக்கி வருகிறது.
மியன்மார் தாக்குதலில் 9 போலிஸ்காரர்கள் பலி
11 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Mar 2019 09:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!