செயற்கைக்கோள்களின் மீது குறிவைத்துத் தாக்கக்கூடிய ஆற்றலைக் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்திருப்பதாக அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
தாழ்வாகப் பறக்கும் செயற்கைக்கோள் ஒன்றை இந்தியா மூன்று நிமிடங்களில் சுட்டு வீழ்த்தியதாகத் திரு மோடி நேரலை தொலைக்காட்சி உரையில் அறிவித்திருக்கிறார். இந்த ஆற்றல் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
"விண்வெளி வல்லரசு என்ற பெயரை இந்தியா இன்று தனது நிலைநாட்டியுள்ளது. தற்காப்புக் காரணங்களுக்காக இனி இந்தியா விண்வெளியைப் பயன்படுத்தலாம்" என்றார் திரு மோடி.