தேசிய மரபுடைமைக் கழகத்துடன் இணைந்து சிங்போஸ்ட் நிறுவனம் புதிய அஞ்சல்தலைகளை வெளியிடவுள்ளது. 'மித்ஸ் அண்ட் லெஜண்ட்ஸ்' என அழைக்கப்படும் அந்த அஞ்சல்தலைகள் சிங்கப்பூரின் தெற்குத் தீவுகளான சிஸ்டர்ஸ் ஐலண்ட்ஸ், கூசூ ஐலண்ட் ஆகியவற்றின் நாட்டுப் புறக் கதைகளைச் சித்திரிப்பவையாக உள்ளன. நாளை இந்த அஞ்சல்தலைகள் வெளியீடு காணும். கடுமையான புயலிலிருந்து இரண்டு மீனவர்களைக் காப்பாற்றி தம் முதுகில் அவ்விரு வரையும் சுமந்துகொண்டு இந்தத் தீவுக்கு பெரிய ஆமை ஒன்று வந்த பிறகு அந்தத் தீவே அவர் களது இல்லமானது. அந்த ஆமையின் நினைவாக கூசூ ஐலண்ட் என அத்தீவுக்கு பெயரிடப்பட்டது. நாளை முதல் அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை சன்டெக் சிட்டியில் உள்ள அடுத்த தலைமுறை அஞ்சலகத்தில் பொதுக் கண்காட்சி ஒன்றை சிங்போஸ்ட், தேசிய மரபுடைமைக் கழகம், சிங்கப்பூர் அஞ்சல்தலைப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
தேசிய மரபுடைமைக் கழகமும் சிங்போஸ்ட் நிறுவனமும் இணைந்து நாளை வெளியிடவுள்ள கூசூ ஐலண்ட் (மேல் வரிசை), சிஸ்டர்ஸ் ஐலண்ட்ஸ் தொடர்பான நாட்டுப்புறக் கதைகளைச் சித்திரிக்கும்
அஞ்சல்தலைகள். படம்: சிங்போஸ்ட்