புதுடெல்லி: பிரபல நிறுவனங் களின் ரொட்டிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயன பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அதுகுறித்து விசாரணை நடத்த மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா உத்தரவிட்டார். பிரபல நிறுவனங்களின் ரொட்டி தயாரிப்புகளில் புற்று நோயை உருவாக்கும் ரசாயன பொருட்கள் இருப்பதாக வெளி யாகி உள்ள தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற் படுத்தி இருக்கிறது. இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா கூறுகையில், "இந்த விஷயத்தை உடனடி யாக கவனத்தில் எடுத்துக்கொண்டோம்.
இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு எனது இலாகா அதிகாரிகளை கேட்டுக் கொண்டு இருக்கிறேன். இதுபற்றி பீதி கொள்ளத் தேவையில்லை. விரைவில் விசாரணை அறிக்கை வந்துவிடும்,'' என்று குறிப்பிட்டார். மத்திய அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வு முடிவு குறித்து மத்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் உடனடியாக ஓர் அறிவிப்பை வெளி யிட்டார்.
அதில், ''பொட்டாசியம் புரோமேட்டை உணவு பொருட்களில் சேர்க்கக் கூடாது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் பரிந்துரை செய்து உள்ளது. ஏற்கனவே இதை சேர்க்கை பட்டியலில் இருந்து அகற்றிவிட முடிவு செய்து இருக்கிறோம். இதுபற்றிய அறிவிக்கை விரை வில் வெளியிடப்படும். பொட்டாசியம் அயோடேட் பற்றி ஆய்வு நடத்தி வருகிறோம். இதுகுறித்தும் விரைவில் முடிவு எடுக்கப் படும் என்று தெரிவித்தார். நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பிரபல ரொட்டி நிறுவனங்களின் தயாரிப்புத் தரம் குறித்து அண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு மேற்கொண்டது. இதற்காக டெல்லியில் விற்பனை செய்யப்பட்ட பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட், கே.எப்.சி., பீசா ஹட், டொமினோஸ், சப்வே, மெக்டொனால்டு, சிலைஸ் ஆப் இத்தாலி உள்ளிட்ட 38 நிறுவனங்களின் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரொட்டி, 'பன்' போன்றவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.