சாங்கி பொது மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் நவம்பர் 20ஆம் தேதியன்று மருத்துவ விடுப்பு எடுத்து, அதற்கான போலிச் சான்றிதழை ஐந்து நாட்களுக்குப் பிறகு தயாரித்தார்.
இதற்காக, 29 வயது ஜொவெல் அருண் சுர்சஸுக்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.