திருச்சி: திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
திருச்சி தொட்டியத்தில், தோளூர்பட்டி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் சேர்ந்த உண்டியல் பணத்தை எடுத்துச் செல்லும்படி ஒரு தரப்பினரும், எடுத்துச் செல்லக் கூடாது என்று மறு தரப்பினரும் மோதிக் கொண்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
இந்நிலையில் தோளூர்பட்டியில் ஒரு சமூகத்தினரின் வீடுகளின் மேற்கூரைகள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.