காமன்வெல்த் அவென்யூ ஈஸ்டில் நடந்த வாகன விபத்தில் நாய் ஒன்று உயிரிழந்தது. ‘ஸ்கின்னி’ என்ற அந்நாய் சாலையோரத்தில் படுத்துக் கிடப்பதைக் காட்டும் படத்தை ‘ஸ்டாம்’ செய்தி இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
படத்தை அனுப்பிய வழிப்போக்கர் ‘ஸ்கின்னி’யை விலங்கு மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி ‘ஸ்கின்னி’ உயிர் இழந்தது. நாயை மோதிய வாகனத்தின் ஓட்டுநர் நிற்காமல் அங்கிருந்து அகன்றதால் இது குறித்து போலிசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக மைக்கல் என்ற அந்த வழிப்போக்கர் தெரிவித்திருக்கிறார்.