இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இன்று இரண்டாவது முறை யாகப் பதவி ஏற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் 60 முதல் 66 பேர் வரை இருப்பார்கள் என்றும் மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வர்களுக்கு முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
கூட்டணிக் கட்சிகளான அதிமுக, லோக் ஜனசக்தி, சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் இருக்கும் என்று தெரிகிறது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பதே ஊட
கங்களின் மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. (படத்தில்) மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் மோடியையும் அவர் அமல்படுத்திய ‘தூய்மை இந்தியா’ திட்டத்தையும் மகாத்மா காந்தியுடன் இணைத்து ஓவியர் ஒருவர் நேற்று தமது கைத் திறனைக் காட்டினார். படம்: இபிஏ