இளைஞர்கள் மேடை நாடகம் எழுதுவதை ஊக்குவிக்கும் வகை யிலான பட்டறை ஒன்றுக்கு அவாண்ட் நாடகக்குழுவும் வளர் தமிழ் இயக்கமும் ஏற்பாடு செய் துள்ளன.
ஏட்டிலிருந்து மேடைவரை எனும் தலைப்பில் நடைபெறவுள்ள இந்தப் பட்டறையில் நூலகத்தில் இருந்து பல புத்தகங்களை ஆய்வு செய்த பிறகு முழுநீள மேடை நாடகத்தை எழுதும் முயற்சியில் இளையர்கள் ஈடுபடுவர்.
இம்மாதமும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள இருவேறு பட் டறைகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் 35 வயதுக்கும் குறையாத இளைஞர்கள் பங்குபெற லாம். ஒவ்வொரு அமர்விலும்
15 பேர் கலந்துகொள்ளலாம்.
முற்றிலும் இலவசமாக நடத்தப் படும் இப்பட்டறைகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு admin@avanttheatre.com என்ற மின் னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
நாள்: வரும் 13, 15, 20, 22 ஆகிய தேதிகள்
ஆகஸ்ட் 15, 17, 22, 24 ஆகிய தேதிகள்
நேரம்: வார நாட்களில் இரவு 7.30 முதல் 10.30 மணி வரை