சென்னை: குடிநீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்க சென்னை ஓஎம்ஆர் பகுதி கணினி நிறுவனங்கள் தங்க ளின் ஊழியர்களை வீட்டிலி ருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளன. ஓஎம்ஆர் பகுதிக்கு ஒருநாளைக்கு 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
இவற்றில் 60% தண்ணீர் கணினி நிறுவனங்களுக்குத் தேவை. ஆனால் அந்த அளவுக்குக் கிடைக்காததால் 'குடிநீரை கையோடு எடுத்து வாருங்கள் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்' என்று பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வலியுறுத்தி வருகின்றன.