பசு விழுங்கி  இரு ஆண்டுகள் சாணிக் குழியிலேயே கிடந்த  5 பவுன் சங்கிலி

கொல்லம்: கேரளாவில் கொல்லம் மாவட்டம் சதய மங்கலத்தைச் சேர்ந்த உல்முக், விஷாஹினா தம்பதியர் தங்கள் நிலத்திற்கு உரமாக அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரிடம் இருந்து சாணத்தை வாங்கினர்.

சாணத்தைப் பயிருக்குப் போட்டபோது இலியாஸ் என்ற பெயருடன் 5 பவுன் தங்கச் சங்கிலி ஒன்று அவர்கள் கையில் சிக்கியது. சங்கிலியை உரியவரிடம் ஒப்படைக்க அவர்கள் சமூக வலைத் தளங்களை நாடினர்.

சதயமங்கலத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள துடயனூர் தெக்கில் என்ற கிராமத்தைச் சேர்ந்த இலியாஸ் என்பவருக்கு அந்த நகை சொந்தம் என்பது தெரிந்தது. சதயமங்கலம் போலிஸ் நிலையத்தில் இலியாஸிடம் சங்கிலியை உல்முக் ஒப்படைத்தார்.

இரு ஆண்டுகளுக்கு முன் இலியாஸ் வீட்டில் இலியாஸின் மனைவி தன் சங்கிலையைக் கழற்றி கீழே வைத்துவிட்டு பசுவுக்குப் புல் வைத்துக் கொண்டு இருந்தார். தங்கச் சங்கிலியைப் புல்லுடன் சேர்த்து மாடு தின்றுவிட்டது.

கொஞ்ச காலம் சங்கிலியைத் தேடி பிறகு இலியாஸ் தம்பதியர் அந்த முயற்சியைக் கைவிட்டு மாட்டையும் விற்றுவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!