பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் களை ‘நாய்கள்’ எனத் திட்டியது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
‘தமிழ்ப் படைப்பாளிகள் பேரி யக்கம்’ என்ற அமைப்பு ‘வளர்க்கப் படுகின்ற வெறுப்பு அரசியல்’ எனும் தலைப்பில் ஒரு கருத்தரங் கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதில் கலந்துகொண்டு சிறப் புரை ஆற்றிய ராமதாஸ், கோல்கத் தாவை மையமாகக் கொண்ட பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் சில ஆண்டுகளுக்குமுன் தம்மிடம் கேட்ட கேள்வியை நினைவுகூர்ந்தார்.
வன்னிய சமுதாயத்தினருக்குத் தனி இடஒதுக்கீடு கேட்டுப் போரா டியபோது ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டதற்குத் தம்முடைய இயக்கம் பொறுப்பேற்குமா என்று அந்தச் செய்தியாளர் கேட்டதாக ராமதாஸ் கூறினார்.
அதற்கு, “இந்தக் கேள்விக்கு 200 முறை பதிலளித்துவிட்டேன். இனிமேல் அந்தக் கேள்வியை எவரேனும் கேட்டால், கேட்பவரை வெட்டிவிட்டு அதன்பிறகு போராட் டம் செய்வோம்,” என்றார் அவர்.
கடந்த காலங்களில் தான் நட்ட ஆயிரக்கணக்கான மரங் களை வந்து பார்க்கும்படி ஊடகத் தினருக்கு அழைப்பு விடுத்த தாகவும் ஆனாலும் அவற்றைப் பார்க்க ஒருவர்கூட வரவில்லை என்றும் ராமதாஸ் ஆதங்கப்பட் டார்.
அதைத் தொடர்ந்து, செய்தி யாளர்களை மோசமான, இழிவான சொற்களால் அவர் திட்டியதாகக் கூறப்படுகிறது.
அவரது பேச்சைக் கேட்டு கூட்டத்தினர் அதிர்ந்துபோயினர். அதே வேளையில், பாமகவினர் மட்டும் தங்களுடைய தலைவரின் பேச்சுக்குக் கரவொலி எழுப்பிய தாகச் சொல்லப்பட்டது.
இதையடுத்து, ஊடகத்தினர் அவரது பேச்சால் ஆத்திரமும் வேதனையும் அடைந்துள்ளனர்.
“ஊடகங்களைத் தாராளமாக விமர்சிக்கலாம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், மருத்துவர் ராமதாஸ் போன்ற மூத்த அரசியல் தலைவர் ஒருவர் நாகரிகமற்ற, இழிவான சொற்களைப் பயன்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர் பயன்படுத்திய சொற்களை அச்சில்கூட ஏற்ற முடியாது,” என்றார் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைத் தலைவர் பாரதி தமிழன்.
மருத்துவர் ராமதாஸ் பொறுப் பற்றுப் பேசியதை பத்திரிகையாளர் சமூகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களும் கண்டிக்கவேண்டும் என்ற அவர், தமது கருத்து களுக்காக ராமதாஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலி யுறுத்தினார்.