காகிதத்தைப் போல் சுருட்டி எடுத்துச் செல்லக்கூடிய கணினியை உருவாக்கு வதற்கான தொழில்நுட்பத்தைத் தென் கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவி லிருந்து வெளிவரும் 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' அறிவியல் இதழில் வெளியான தகவல்: தென் கொரியாவின் கொரிய அறிவியல் கழகத்தைச் (கே.ஏ.ஐ. எஸ்.டி.) சேர்ந்த சேயுன்குயப் யூ, போஹாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (போஸ்டெக்) சேர்ந்த டே-வூ லீ ஆகியோர் தலைமையில் கணினி, தொலைக்காட்சி, கைப்பேசி ஆகியவற்றின் திரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில், திரைகளை உருவாக்கத் தேவையான 'ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு' தயாரிப்பில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தென் கொரிய விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.