மலேசியாவின் அமைச்சரவையில் மாற்றம் செய்யவேண்டிய காலம் நெருங்கிவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மது அறிவித்திருக்கிறார்.
புதன்கிழமை ( ஆகஸ்ட் 21) நிகழ்ந்த அமைச்சரவைக் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் இதனை அறிவித்ததாகத் தகவல்கள் கசிந்ததை ‘த ஸ்டார்’ பத்திரிகை தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“அமைச்சரவைக் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்த அறிவிப்பு வெளிவந்தது. அமைச்சர்கள் சிலரின் பொறுப்புகள் மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது,” என்று ‘த ஸ்டார்’ தெரிவித்தது.
மலேசியாவின் ஆளுங்கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானின் உறுப்புக் கட்சிகளின் தலைவர்களை டாக்டர் மகாதீர் இன்று மாலை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.