சோஃபியா: யூரோ காற்பந்துக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது இங்கிலாந்து வீரர்களை இனத்தைக் கூறித் தூற்றிய சம்பவம் தொடர்பில் ரசிகர்கள் நால்வரை பல்கேரிய போலிசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணி தொடர்வதாக பல்கேரிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி 6-0 என்ற கோல் கணக்கில் வென்ற அந்த ஆட்டம், ரசிகர்களின் இடையூறு காரணமாக இரண்டு முறை இடையில் நிறுத்தப்பட்டது.
முன்னதாக, ரசிகர்கள் இனத்தைக் கூறி பழித்ததற்குப் பொறுப்பேற்று, பல்கேரிய காற்பந்துச் சங்கத்தின் தலைவர் போரிஸ்லவ் மிகாய்லவ் பதவி விலகினார்.