புதுடெல்லி: வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் உயிரிழப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல் பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தை களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
“42% குழந்தைகளே போதிய அளவில் உணவை பெறுகின்றனர்.
“21% குழந்தைகள் மட்டுமே போதிய அளவிலான பல்வேறு உணவுப் பொருட்களை பெறுகின்றனர். ஐந்து வயதுக்கு கீழுள்ள ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறை உள்ளது,” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.