சென்னை: மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி களை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இத்தகைய முயற்சியானது குளவிக்கூட்டுக்குள் கையை விடும் செயல் எனவும் அவர் குறை கூறியுள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து முதலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நாட்டின் அனைத்து தரப்பினரிடமும் கருத் தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், இந்த விவகாரத்தில் சட்ட ஆணையத்தின் பரிந்து ரையைப் பெறுவது மட்டும் முக்கியமல்ல என்று கூறியுள்ளார்.
"பல்வேறு சமயங்கள் மற்றும் சாதிகளிடையே தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறைகளையும் நெடுங்காலப் பழக்க வழக்கங் களையும் ஒருங்கிணைத்து அனைவருக்கும் பொதுவான தொரு சிவில் சட்டத்தை ஏற்ப டுத்துவது என்பதும் எளிதான காரியமல்ல. "நமது நாட்டில் தீர்வு காணப் பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும்போது பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள், நீதித் துறைச் சீர்திருத்தங்கள் எனப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கை கள் நாள்தோறும் பெருகிவரும் போது பொது சிவில் சட்டம் என்னும் முன்னுரிமை இல்லாத, சிக்கலான பிரச்சினையைக் கையிலெடுக்க முயற்சிப்பது சரியல்ல," என்று கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளார். பல்வேறு மதங்களையும் சாதிகளையும் உள்ளடக்கிய பொது சிவில் சட்டம் என்பது செயல் வடிவம் பெற முடியாத ஒன்று என்றும் அது கற்பனைக் கும் ஒவ்வாத கருத்தியல் என்றும் கருணாநிதி அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.